கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்திலே சேர்ந்தார்கள்.
அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.
அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன்.
ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள்.
பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள்.
ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.
அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன?
| And the Lord | וַיֵּרָ֤א | wayyērāʾ | va-yay-RA |
| appeared | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Abram, | אַבְרָ֔ם | ʾabrām | av-RAHM |
| and said, | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Unto thy seed | לְזַ֨רְעֲךָ֔ | lĕzarʿăkā | leh-ZAHR-uh-HA |
| will I give | אֶתֵּ֖ן | ʾettēn | eh-TANE |
| אֶת | ʾet | et | |
| this | הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| land: | הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE |
| and there | וַיִּ֤בֶן | wayyiben | va-YEE-ven |
| builded | שָׁם֙ | šām | shahm |
| he an altar | מִזְבֵּ֔חַ | mizbēaḥ | meez-BAY-ak |
| unto the Lord, | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
| who appeared | הַנִּרְאֶ֥ה | hannirʾe | ha-neer-EH |
| unto | אֵלָֽיו׃ | ʾēlāyw | ay-LAIV |