யாத்திராகமம் 15:9
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.
Tamil Indian Revised Version
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், என்னுடைய பட்டயத்தை உருவுவேன், என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான்.
Tamil Easy Reading Version
“நான் தொடர்ந்து பிடிப்பேன், ‘நான் அவர்கள் செல்வத்தைப் பறிப்பேன். எனது வாளால் அவற்றை அபகரிப்பேன். நான் எல்லாவற்றையும் எனக்காக எடுப்பேன்’ என்று பகைவன் சொன்னான்.
Thiru Viviliam
⁽எதிரி சொன்னான்:␢ ‛துரத்திச் செல்வேன்;␢ முன் சென்று மடக்குவேன்;␢ கொள்ளைப் பொருளைப்␢ பங்கிடுவேன்; என் மனம் இதனால்␢ நிறைவு கொள்ளும்;␢ என் வாளை உருவுவேன்;␢ என் கை அவர்களை அழிக்கும்.’⁾
King James Version (KJV)
The enemy said, I will pursue, I will overtake, I will divide the spoil; my lust shall be satisfied upon them; I will draw my sword, my hand shall destroy them.
American Standard Version (ASV)
The enemy said, I will pursue, I will overtake, I will divide the spoil; My desire shall be satisfied upon them; I will draw my sword, my hand shall destroy them.
Bible in Basic English (BBE)
Egypt said, I will go after them, I will overtake, I will make division of their goods: my desire will have its way with them; my sword will be uncovered, my hand will send destruction on them.
Darby English Bible (DBY)
The enemy said, I will pursue, I will overtake, I will divide the spoil; my soul shall be sated upon them; I will unsheath my sword, my hand shall dispossess them.
Webster’s Bible (WBT)
The enemy said, I will pursue, I will overtake, I will divide the spoil; my lust shall be satisfied upon them; I will draw my sword, my hand shall destroy them.
World English Bible (WEB)
The enemy said, ‘I will pursue, I will overtake, I will divide the spoil. My desire shall be satisfied on them. I will draw my sword, my hand shall destroy them.’
Young’s Literal Translation (YLT)
The enemy said, I pursue, I overtake; I apportion spoil; Filled is my soul with them; I draw out my sword; My hand destroyeth them: —
யாத்திராகமம் Exodus 15:9
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.
The enemy said, I will pursue, I will overtake, I will divide the spoil; my lust shall be satisfied upon them; I will draw my sword, my hand shall destroy them.
| אָמַ֥ר | ʾāmar | ah-MAHR | |
| אוֹיֵ֛ב | ʾôyēb | oh-YAVE | |
| אֶרְדֹּ֥ף | ʾerdōp | er-DOFE | |
| אַשִּׂ֖יג | ʾaśśîg | ah-SEEɡ | |
| אֲחַלֵּ֣ק | ʾăḥallēq | uh-ha-LAKE | |
| שָׁלָ֑ל | šālāl | sha-LAHL | |
| תִּמְלָאֵ֣מוֹ | timlāʾēmô | teem-la-A-moh | |
| נַפְשִׁ֔י | napšî | nahf-SHEE | |
| אָרִ֣יק | ʾārîq | ah-REEK | |
| חַרְבִּ֔י | ḥarbî | hahr-BEE | |
| תּֽוֹרִישֵׁ֖מוֹ | tôrîšēmô | toh-ree-SHAY-moh | |
| יָדִֽי׃ | yādî | ya-DEE |
Cross Reference
ஏசாயா 53:12
அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.
நியாயாதிபதிகள் 5:30
அவர்கள் கொள்ளையைக் கண்டு பிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள்.
லுூக்கா 11:22
அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான்.
யாத்திராகமம் 14:5
ஜனங்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, ஜனங்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவன் ஊழியக்காரரும் மனம் வேறுபட்டு: நமக்கு வேலை செய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டது என்ன காரியம் என்றார்கள்.
ஆதியாகமம் 49:27
பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான்.
ஆபகூக் 3:14
என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சிறுமையானவனை மறைவிடத்திலே பட்சிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது, நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய கிராமத்து அதிபதிகளை உருவக் குத்தினீர்.
ஏசாயா 36:20
கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு அந்தத்தேசங்களுடைய எல்லாத் தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.
ஏசாயா 10:8
அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
1 இராஜாக்கள் 20:10
அப்பொழுது பெனாதாத் அவனிடத்தில் ஆள் அனுப்பி: எனக்குப் பின் செல்லுகிற ஜனங்கள் எல்லாரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாயிருந்தால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான்.
1 இராஜாக்கள் 19:2
அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்கு செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.
யாத்திராகமம் 14:8
கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.
Tags தொடருவேன் பிடிப்பேன் கொள்ளையாடிப் பங்கிடுவேன் என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும் என் பட்டயத்தை உருவுவேன் என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்
Exodus 15:9 in Tamil Concordance Exodus 15:9 in Tamil Interlinear Exodus 15:9 in Tamil Image