அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக.
இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக.
உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசம பாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து,
உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நீங்களும், உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும், உங்கள் வேலைக்காரரும், உங்கள் வேலைக்காரிகளும், உங்களோடு பங்கும் சுதந்தரமும் இல்லாமல் உங்கள் வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக.
கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக.
உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக்காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.
நீ உன் தேசத்திலுருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்கும்போது, நீ இறைச்சி புசிக்க ஆசைகொண்டு, இறைச்சி புசிப்பேன் என்பாயானால், நீ உன் இஷ்டப்படி இறைச்சி புசிக்கலாம்.
நீ கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடலாகாது.
உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும்கூடப் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்றப் பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது; மாம்சத்தையோ நீ புசிக்கலாம்.
நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் சங்கரிக்கும்போதும், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்து அதிலே குடியிருக்கும்போதும்,
| If | כִּֽי | kî | kee |
| the place | יִרְחַ֨ק | yirḥaq | yeer-HAHK |
| which | מִמְּךָ֜ | mimmĕkā | mee-meh-HA |
| the Lord | הַמָּק֗וֹם | hammāqôm | ha-ma-KOME |
| thy God | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| hath chosen | יִבְחַ֜ר | yibḥar | yeev-HAHR |
| to put | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| his name | אֱלֹהֶיךָ֮ | ʾĕlōhêkā | ay-loh-hay-HA |
| there | לָשׂ֣וּם | lāśûm | la-SOOM |
| be too far | שְׁמ֣וֹ | šĕmô | sheh-MOH |
| from | שָׁם֒ | šām | shahm |
| thee, then thou shalt kill | וְזָֽבַחְתָּ֞ | wĕzābaḥtā | veh-za-vahk-TA |
| of thy herd | מִבְּקָֽרְךָ֣ | mibbĕqārĕkā | mee-beh-ka-reh-HA |
| and of thy flock, | וּמִצֹּֽאנְךָ֗ | ûmiṣṣōʾnĕkā | oo-mee-tsoh-neh-HA |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the Lord | נָתַ֤ן | nātan | na-TAHN |
| hath given | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| thee, as | לְךָ֔ | lĕkā | leh-HA |
| I have commanded | כַּֽאֲשֶׁ֖ר | kaʾăšer | ka-uh-SHER |
| thee, and thou shalt eat | צִוִּיתִ֑ךָ | ṣiwwîtikā | tsee-wee-TEE-ha |
| in thy gates | וְאָֽכַלְתָּ֙ | wĕʾākaltā | veh-ah-hahl-TA |
| whatsoever | בִּשְׁעָרֶ֔יךָ | bišʿārêkā | beesh-ah-RAY-ha |
| thy soul | בְּכֹ֖ל | bĕkōl | beh-HOLE |
| lusteth after. | אַוַּ֥ת | ʾawwat | ah-WAHT |
| נַפְשֶֽׁךָ׃ | napšekā | nahf-SHEH-ha |