நான் உபவாசம்பண்ணி இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி,
உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகல ஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம்.
ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.
இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.
எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார்.
ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குக் செவிகொடாமற்போனோம்.
இப்போதும் உமது ஜனத்தைப் பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, உமக்கு கீர்த்தியை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய் நடந்தோம்.
இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.
இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன்.
| As | כַּאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER |
| it is written | כָּתוּב֙ | kātûb | ka-TOOV |
| in the law | בְּתוֹרַ֣ת | bĕtôrat | beh-toh-RAHT |
| of Moses, | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
| אֵ֛ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| this | הָרָעָ֥ה | hārāʿâ | ha-ra-AH |
| evil | הַזֹּ֖את | hazzōt | ha-ZOTE |
| is come | בָּ֣אָה | bāʾâ | BA-ah |
| upon | עָלֵ֑ינוּ | ʿālênû | ah-LAY-noo |
| us: yet made we not | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| our prayer | חִלִּ֜ינוּ | ḥillînû | hee-LEE-noo |
| before | אֶת | ʾet | et |
| פְּנֵ֣י׀ | pĕnê | peh-NAY | |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| our God, | אֱלֹהֵ֗ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
| that we might turn | לָשׁוּב֙ | lāšûb | la-SHOOV |
| from our iniquities, | מֵֽעֲוֹנֵ֔נוּ | mēʿăwōnēnû | may-uh-oh-NAY-noo |
| and understand | וּלְהַשְׂכִּ֖יל | ûlĕhaśkîl | oo-leh-hahs-KEEL |
| thy truth. | בַּאֲמִתֶּֽךָ׃ | baʾămittekā | ba-uh-mee-TEH-ha |