Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 11:8 in Tamil

Home Bible Romans Romans 11 Romans 11:8

ரோமர் 11:8
கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

Tamil Indian Revised Version
தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது.

Tamil Easy Reading Version
“மக்களின் உணர்ச்சியை தேவன் மறக்கச் செய்தார்” என்றும் அதனால், “தேவன் அவர்களின் கண்களை மூடினார்.” “அதனால் அவர்களால் உண்மையைப் பார்க்க முடியவில்லை. தேவன் அவர்களின் காதுகளை மூடினார். அதனால் அவர்களால் உண்மையாகக் கேட்க முடியவில்லை. இது இன்றும் தொடர்கிறது”. என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

Thiru Viviliam
⁽“ஆழ்ந்த தூக்கம் தரும் ஆவியை␢ ஆண்டவர் உங்கள் மீது␢ அனுப்பியுள்ளார்;␢ காண்கின்ற கண்களையும்␢ கேட்கின்ற செவிகளையும்␢ இந்நாள்வரை ஆண்டவர்␢ உங்களுக்குத் தரவில்லை”⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது.

Romans 11:7Romans 11Romans 11:9

King James Version (KJV)
(According as it is written, God hath given them the spirit of slumber, eyes that they should not see, and ears that they should not hear;) unto this day.

American Standard Version (ASV)
according as it is written, God gave them a spirit of stupor, eyes that they should not see, and ears that they should not hear, unto this very day.

Bible in Basic English (BBE)
As it was said in the holy Writings, God gave them a spirit of sleep, eyes which might not see, and ears which have no hearing, to this day.

Darby English Bible (DBY)
according as it is written, God has given to them a spirit of slumber, eyes not to see, and ears not to hear, unto this day.

World English Bible (WEB)
According as it is written, “God gave them a spirit of stupor, eyes that they should not see, and ears that they should not hear, to this very day.”

Young’s Literal Translation (YLT)
according as it hath been written, `God gave to them a spirit of deep sleep, eyes not to see, and ears not to hear,’ — unto this very day,

ரோமர் Romans 11:8
கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
(According as it is written, God hath given them the spirit of slumber, eyes that they should not see, and ears that they should not hear;) unto this day.

καθὼςkathōska-THOSE
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
ἜδωκενedōkenA-thoh-kane
αὐτοῖςautoisaf-TOOS
hooh
θεὸςtheosthay-OSE
πνεῦμαpneumaPNAVE-ma
κατανύξεωςkatanyxeōska-ta-NYOO-ksay-ose
ὀφθαλμοὺςophthalmousoh-fthahl-MOOS
τοῦtoutoo
μὴmay
βλέπεινblepeinVLAY-peen
καὶkaikay
ὦταōtaOH-ta
τοῦtoutoo
μὴmay
ἀκούεινakoueinah-KOO-een
ἕωςheōsAY-ose
τῆςtēstase
σήμερονsēmeronSAY-may-rone
ἡμέραςhēmerasay-MAY-rahs

Cross Reference

உபாகமம் 29:4
ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.

ஏசாயா 29:10
கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடுபோட்டார்.

எரேமியா 5:21
கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள்.

2 கொரிந்தியர் 3:14
அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.

மத்தேயு 13:13
அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.

எசேக்கியேல் 12:2
மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார்.

2 இராஜாக்கள் 17:41
அப்படியே அந்த ஜாதிகள் கர்த்தருக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் பிதாக்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்துவருகிறார்கள்.

லுூக்கா 8:10
அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

மாற்கு 4:11
அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது. புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

ஏசாயா 6:9
அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:26
நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள்

2 இராஜாக்கள் 17:34
இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுயதிட்டங்கள் முறைமைகளின் படியாகிலும், கர்த்தர் இஸ்ரவேல் என்று பேரிட்ட யாக்கோபின் புத்திரருக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தபடியாகிலும் செய்கிறதுமில்லை.


Tags கனநித்திரையின் ஆவியையும் காணாதிருக்கிற கண்களையும் கேளாதிருக்கிற காதுகளையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று
Romans 11:8 in Tamil Concordance Romans 11:8 in Tamil Interlinear Romans 11:8 in Tamil Image