Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 4:2 in Tamil

Home Bible Luke Luke 4 Luke 4:2

லூக்கா 4:2
நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.

Tamil Indian Revised Version
நாற்பதுநாட்கள் சாத்தானால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசி உண்டானது.

Tamil Easy Reading Version
அங்கு பிசாசு இயேசுவை நாற்பது நாட்கள் சோதனைக்கு உட்படுத்தினான். அந்நாட்களில் இயேசு எதையும் உண்ணவில்லை. சோதனைக் காலமான அந்த நாட்கள் கழிந்த பின்னர், இயேசுவுக்கு மிகுந்த பசி உண்டாயிற்று.

Thiru Viviliam
அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார்.

Luke 4:1Luke 4Luke 4:3

King James Version (KJV)
Being forty days tempted of the devil. And in those days he did eat nothing: and when they were ended, he afterward hungered.

American Standard Version (ASV)
during forty days, being tempted of the devil. And he did eat nothing in those days: and when they were completed, he hungered.

Bible in Basic English (BBE)
For forty days, being tested by the Evil One. And he had no food in those days; and when they came to an end, he was in need of food.

Darby English Bible (DBY)
forty days, tempted of the devil; and in those days he did not eat anything, and when they were finished he hungered.

World English Bible (WEB)
for forty days, being tempted by the devil. He ate nothing in those days. Afterward, when they were completed, he was hungry.

Young’s Literal Translation (YLT)
forty days being tempted by the Devil, and he did not eat anything in those days, and they having been ended, he afterward hungered,

லூக்கா Luke 4:2
நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
Being forty days tempted of the devil. And in those days he did eat nothing: and when they were ended, he afterward hungered.

ἡμέραςhēmerasay-MAY-rahs
τεσσαράκονταtessarakontatase-sa-RA-kone-ta
πειραζόμενοςpeirazomenospee-ra-ZOH-may-nose
ὑπὸhypoyoo-POH
τοῦtoutoo
διαβόλουdiabolouthee-ah-VOH-loo
καὶkaikay
οὐκoukook
ἔφαγενephagenA-fa-gane
οὐδὲνoudenoo-THANE
ἐνenane
ταῖςtaistase
ἡμέραιςhēmeraisay-MAY-rase
ἐκείναιςekeinaisake-EE-nase
καὶkaikay
συντελεσθεισῶνsyntelestheisōnsyoon-tay-lay-sthee-SONE
αὐτῶνautōnaf-TONE
ὕστερονhysteronYOO-stay-rone
ἐπείνασενepeinasenay-PEE-na-sane

Cross Reference

1 இராஜாக்கள் 19:8
அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வத மட்டும் நடந்துபோனான்.

யாத்திராகமம் 34:28
அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.

எபிரெயர் 4:15
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

எபிரெயர் 2:18
ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.

உபாகமம் 9:9
கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.

யோவான் 4:6
அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது.

உபாகமம் 9:18
கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போலும் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.

மத்தேயு 21:18
காலையிலே அவர் நகரத்துக்கு திரும்பி வருகையில், அவருக்குப் பசி உண்டாயிற்று.

மத்தேயு 4:2
அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.

யோனா 3:7
மேலும் ராஜா தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயில் எங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும்,

எஸ்தர் 4:16
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.

1 சாமுவேல் 17:16
அந்தப் பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்துவந்து நிற்பான்.

உபாகமம் 9:25
கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல் கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:

யாத்திராகமம் 24:18
மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.

ஆதியாகமம் 3:15
உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.


Tags நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார் அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார் அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று
Luke 4:2 in Tamil Concordance Luke 4:2 in Tamil Interlinear Luke 4:2 in Tamil Image