Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 4:18 in Tamil

Home Bible Lamentations Lamentations 4 Lamentations 4:18

புலம்பல் 4:18
நாங்கள் எங்கள் வீதிகளில் நடவாதபடிக்கு எங்கள் அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள்; எங்கள் முடிவு சமீபித்தது; எங்கள் நாட்கள் நிறைவேறிப்போயின; எங்கள் முடிவு வந்துவிட்டது.

Tamil Indian Revised Version
நாங்கள் எங்கள் வீதிகளில் நடந்து செல்லாதபடி எங்கள் பாதசுவடுகளை வேட்டையாடினார்கள்; எங்கள் முடிவு நெருங்கியது; எங்கள் நாட்கள் நிறைவேறிவிட்டது; எங்கள் முடிவு வந்துவிட்டது.

Tamil Easy Reading Version
எங்கள் பகைவர்கள் எப்பொழுதும் எங்களை வேட்டையாடினார்கள். எங்களால் வீதிகளுக்குக் கூடப் போகமுடியவில்லை. எங்கள் முடிவு அருகில் நெருங்கி வந்தது. எங்கள் காலம் போய்விட்டது. எங்கள் முடிவு வந்தது!

Thiru Viviliam
⁽எம் நடமாட்டம் கவனிக்கப்பட்டது;␢ எம் தெருக்களில் கூட␢ எம்மால் நடக்க முடியவில்லை;␢ எம் முடிவு நெருங்கிவிட்டது;␢ எம் நாள்கள் முடிந்துவிட்டன;␢ எம் முடிவு வந்து விட்டது.⁾

Lamentations 4:17Lamentations 4Lamentations 4:19

King James Version (KJV)
They hunt our steps, that we cannot go in our streets: our end is near, our days are fulfilled; for our end is come.

American Standard Version (ASV)
They hunt our steps, so that we cannot go in our streets: Our end is near, our days are fulfilled; for our end is come.

Bible in Basic English (BBE)
They go after our steps so that we may not go in our streets: our end is near, our days are numbered; for our end has come.

Darby English Bible (DBY)
They hunted our steps, that we could not go in our streets: our end is near, our days are fulfilled; for our end is come.

World English Bible (WEB)
They hunt our steps, so that we can’t go in our streets: Our end is near, our days are fulfilled; for our end is come.

Young’s Literal Translation (YLT)
They have hunted our steps from going in our broad-places, Near hath been our end, fulfilled our days, For come hath our end.

புலம்பல் Lamentations 4:18
நாங்கள் எங்கள் வீதிகளில் நடவாதபடிக்கு எங்கள் அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள்; எங்கள் முடிவு சமீபித்தது; எங்கள் நாட்கள் நிறைவேறிப்போயின; எங்கள் முடிவு வந்துவிட்டது.
They hunt our steps, that we cannot go in our streets: our end is near, our days are fulfilled; for our end is come.

צָד֣וּṣādûtsa-DOO
צְעָדֵ֔ינוּṣĕʿādênûtseh-ah-DAY-noo
מִלֶּ֖כֶתmilleketmee-LEH-het
בִּרְחֹבֹתֵ֑ינוּbirḥōbōtênûbeer-hoh-voh-TAY-noo
קָרַ֥בqārabka-RAHV
קִצֵּ֛ינוּqiṣṣênûkee-TSAY-noo
מָלְא֥וּmolʾûmole-OO
יָמֵ֖ינוּyāmênûya-MAY-noo
כִּיkee
בָ֥אbāʾva
קִצֵּֽנוּ׃qiṣṣēnûkee-tsay-NOO

Cross Reference

ஆமோஸ் 8:2
அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.

எசேக்கியேல் 7:2
மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.

புலம்பல் 3:52
முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப் போல வேட்டையாடினார்கள்.

எரேமியா 16:16
இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன் இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக்குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.

எசேக்கியேல் 12:27
மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.

எசேக்கியேல் 12:22
மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?

எரேமியா 52:7
நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ஓடி, ராஜாவுடைய தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள்.

எரேமியா 51:33
பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப்போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 39:4
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய, சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இராத்திரி காலத்தில் ராஜாவுடைய தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான்.

எரேமியா 1:12
அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்.

சங்கீதம் 140:11
பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.

யோபு 10:16
சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்ண்ணுகிறீர்.

2 இராஜாக்கள் 25:4
அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவுமாய் சமனான பூமியை நோக்கி ஓடிப்போனார்கள்.

1 சாமுவேல் 24:14
இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின் தொடருகிறீர்?


Tags நாங்கள் எங்கள் வீதிகளில் நடவாதபடிக்கு எங்கள் அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள் எங்கள் முடிவு சமீபித்தது எங்கள் நாட்கள் நிறைவேறிப்போயின எங்கள் முடிவு வந்துவிட்டது
Lamentations 4:18 in Tamil Concordance Lamentations 4:18 in Tamil Interlinear Lamentations 4:18 in Tamil Image