ஏசாயா 3:16
பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.
Tamil Indian Revised Version
பின்னும் கர்த்தர் சொல்கிறதாவது: சீயோனின் பெண்கள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் கவர்ச்சியாகப்பார்த்து, ஒய்யாரமாக நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தர்: “சீயோனில் உள்ள பெண்கள் பெருமிதம் கொண்டிருந்தனர். அவர்கள் காற்றில் தம் தலைகளைத் தூக்கிய வண்ணம் நடந்தனர். மற்றவர்களைவிடச் சிறந்தவர்களைப்போன்று நடித்தனர். அவர்கள் கண்ணடித்து, தம் கால் தண்டைகள் ஒலிக்க ஒய்யாரமாக நடந்து திரிந்தனர்” என்றார்.
Thiru Viviliam
⁽மேலும் ஆண்டவர் கூறியது இதுவே:␢ “சீயோன் மகளிர் செருக்குக்␢ கொண்டுள்ளார்கள்;␢ தங்கள் கழுத்தை வளைக்காது␢ நிமிர்ந்து நடக்கின்றார்கள்;␢ தம் கண்களால் காந்தக் கணை␢ தொடுக்கின்றார்கள்;␢ தங்கள் கால்களிலுள்ள சிலம்பு␢ ஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து␢ உலவித் திரிகிறார்கள்.⁾
Other Title
எருசலேம் பெண்களுக்கு எச்சரிக்கை
King James Version (KJV)
Moreover the LORD saith, Because the daughters of Zion are haughty, and walk with stretched forth necks and wanton eyes, walking and mincing as they go, and making a tinkling with their feet:
American Standard Version (ASV)
Moreover Jehovah said, Because the daughters of Zion are haughty, and walk with outstretched necks and wanton eyes, walking and mincing as they go, and making a tinkling with their feet;
Bible in Basic English (BBE)
Again, the Lord has said, Because the daughters of Zion are full of pride, and go with outstretched necks and wandering eyes, with their foot-chains sounding when they go:
Darby English Bible (DBY)
And Jehovah said, Because the daughters of Zion are haughty, and walk with stretched-out neck and wanton eyes, and go along mincing, and making a tinkling with their feet;
World English Bible (WEB)
Moreover Yahweh said, “Because the daughters of Zion are haughty, And walk with outstretched necks and flirting eyes, Walking to trip as they go, Jingling ornaments on their feet;
Young’s Literal Translation (YLT)
`Because that daughters of Zion have been haughty, And they walk stretching out the neck, And deceiving `with’ the eyes, Walking and mincing they go, And with their feet they make a tinkling,
ஏசாயா Isaiah 3:16
பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.
Moreover the LORD saith, Because the daughters of Zion are haughty, and walk with stretched forth necks and wanton eyes, walking and mincing as they go, and making a tinkling with their feet:
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| יַ֚עַן | yaʿan | YA-an | |
| כִּ֤י | kî | kee | |
| גָֽבְהוּ֙ | gābĕhû | ɡa-veh-HOO | |
| בְּנ֣וֹת | bĕnôt | beh-NOTE | |
| צִיּ֔וֹן | ṣiyyôn | TSEE-yone | |
| וַתֵּלַ֙כְנָה֙ | wattēlaknāh | va-tay-LAHK-NA | |
| נְטוּוֹ֣ת | nĕṭûwōt | neh-too-OTE | |
| גָּר֔וֹן | gārôn | ɡa-RONE | |
| וּֽמְשַׂקְּר֖וֹת | ûmĕśaqqĕrôt | oo-meh-sa-keh-ROTE | |
| עֵינָ֑יִם | ʿênāyim | ay-NA-yeem | |
| הָל֤וֹךְ | hālôk | ha-LOKE | |
| וְטָפֹף֙ | wĕṭāpōp | veh-ta-FOFE | |
| תֵּלַ֔כְנָה | tēlaknâ | tay-LAHK-na | |
| וּבְרַגְלֵיהֶ֖ם | ûbĕraglêhem | oo-veh-rahɡ-lay-HEM | |
| תְּעַכַּֽסְנָה׃ | tĕʿakkasnâ | teh-ah-KAHS-na |
Cross Reference
ஏசாயா 32:9
சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.
ஏசாயா 4:4
சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்.
மத்தேயு 21:5
தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
எசேக்கியேல் 16:49
இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.
உன்னதப்பாட்டு 3:11
சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும் அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்.
லுூக்கா 23:28
இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
செப்பனியா 3:11
எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும் அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.
ஏசாயா 24:4
தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து ஜனத்திலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள்.
ஏசாயா 3:18
அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும்,
ஏசாயா 1:8
சீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்தில் உள்ள ஒரு குச்சுபோலவும் வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும், முற்றிக்கை போடப்பட்ட ஒரு பட்டணம் போலவும் மீந்திருக்கிறாள்.
நீதிமொழிகள் 30:13
வேறொரு சந்ததியாருமுண்டு; அவர்கள் கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள்.
நீதிமொழிகள் 16:18
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
Tags பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து கழுத்தை நெறித்து நடந்து கண்களால் மருட்டிப்பார்த்து ஒய்யாரமாய் நடந்து தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்
Isaiah 3:16 in Tamil Concordance Isaiah 3:16 in Tamil Interlinear Isaiah 3:16 in Tamil Image