யோபு 4:19
புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
Tamil Indian Revised Version
புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் குடியிருந்து, செல்லுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
Tamil Easy Reading Version
எனவே நிச்சயமாக ஜனங்கள் மிகவும் மோசமானவர்கள்! அவர்கள் களிமண் வீடுகளில் வசிக்கிறார்கள். இக்களிமண் வீடுகளின் அஸ்திபாரங்கள் புழுதியேயாகும். பொட்டுப்பூச்சியைக் காட்டிலும் எளிதாக அவர்கள் நசுக்கிக் கொல்லப்படுகிறார்கள்.
Thiru Viviliam
⁽புழுதியைக் கால்கோளாகக்கொண்டு,␢ மண் குடிசையில் வாழ்ந்து,␢ அந்துப்பூச்சிபோல் விரைவில் அழியும்␢ மனிதர் எம்மாத்திரம்?⁾
King James Version (KJV)
How much less in them that dwell in houses of clay, whose foundation is in the dust, which are crushed before the moth?
American Standard Version (ASV)
How much more them that dwell in houses of clay, Whose foundation is in the dust, Who are crushed before the moth!
Bible in Basic English (BBE)
How much more those living in houses of earth, whose bases are in the dust! They are crushed more quickly than an insect;
Darby English Bible (DBY)
How much more them that dwell in houses of clay, whose foundation is in the dust, who are crushed as the moth!
Webster’s Bible (WBT)
How much less in them that dwell in houses of clay, whose foundation is in the dust, who are crushed before the moth?
World English Bible (WEB)
How much more, those who dwell in houses of clay, Whose foundation is in the dust, Who are crushed before the moth!
Young’s Literal Translation (YLT)
Also — the inhabitants of houses of clay, (Whose foundation `is’ in the dust, They bruise them before a moth.)
யோபு Job 4:19
புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி?
How much less in them that dwell in houses of clay, whose foundation is in the dust, which are crushed before the moth?
| אַ֤ף׀ | ʾap | af | |
| שֹֽׁכְנֵ֬י | šōkĕnê | shoh-heh-NAY | |
| בָֽתֵּי | bāttê | VA-tay | |
| חֹ֗מֶר | ḥōmer | HOH-mer | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| בֶּֽעָפָ֥ר | beʿāpār | beh-ah-FAHR | |
| יְסוֹדָ֑ם | yĕsôdām | yeh-soh-DAHM | |
| יְ֝דַכְּא֗וּם | yĕdakkĕʾûm | YEH-da-keh-OOM | |
| לִפְנֵי | lipnê | leef-NAY | |
| עָֽשׁ׃ | ʿāš | ash |
Cross Reference
யோபு 10:9
களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.
ஆதியாகமம் 2:7
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
யோபு 33:6
இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
ஆதியாகமம் 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
2 கொரிந்தியர் 5:1
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
2 கொரிந்தியர் 4:7
இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
யோபு 13:28
இப்படிப்பட்டவன் அழுகிப்போகி, வஸ்துபோலவும் பொட்டரித்த வஸ்திரம்போலவும் அழிந்துபோவான்.
யோபு 13:12
உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச்சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்,
ஆதியாகமம் 18:27
அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.
1 பேதுரு 1:24
மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
பிரசங்கி 12:7
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
சங்கீதம் 146:4
அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான், அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.
சங்கீதம் 103:15
மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப்போல பூக்கிறான்.
சங்கீதம் 90:5
அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
சங்கீதம் 39:11
அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே.(சேலா.)
யோபு 22:16
காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
யோபு 14:2
அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.
Tags புழுதியில் அஸ்திபாரம் போட்டு மண் வீடுகளில் வாசம்பண்ணி பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி
Job 4:19 in Tamil Concordance Job 4:19 in Tamil Interlinear Job 4:19 in Tamil Image