நியாயாதிபதிகள் 4:14
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னே பத்தாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.
Tamil Easy Reading Version
அப்போது தெபோராள் பாராக்கிடம், “இன்று சிசெராவைத் தோற்கடிக்க கர்த்தர் உனக்கு உதவுவார். கர்த்தர் உனக்காக வழியை ஏற்கெனவே ஆயத்தமாக வைத்திருக்கிறார் என்பதை அறிவாய்” என்றாள். எனவே பாராக் 10,000 ஆட்களையும் தாபோர் மலையிலிருந்து கீழே வழிநடத்திச் சென்றான்.
Thiru Viviliam
தெபோரா பாராக்கிடம், “எழுந்திரும்; இந்நாளில் ஆண்டவர் சீசராவை உம்மிடம் ஒப்படைப்பார். ஆண்டவர் உம்முன் செல்லவில்லையா?” என்றார். பாராக்கு தாபோர் மலையிலிருந்து இறங்கினார். பத்தாயிரம் பேர் அவரைப் பின்தொடர்ந்தனர்.
King James Version (KJV)
And Deborah said unto Barak, Up; for this is the day in which the LORD hath delivered Sisera into thine hand: is not the LORD gone out before thee? So Barak went down from mount Tabor, and ten thousand men after him.
American Standard Version (ASV)
And Deborah said unto Barak, Up; for this is the day in which Jehovah hath delivered Sisera into thy hand; is not Jehovah gone out before thee? So Barak went down from mount Tabor, and ten thousand men after him.
Bible in Basic English (BBE)
Then Deborah said to Barak, Up! for today the Lord has given Sisera into your hands: has not the Lord gone out before you? So Barak went down from Mount Tabor and ten thousand men after him.
Darby English Bible (DBY)
And Deb’orah said to Barak, “Up! For this is the day in which the LORD has given Sis’era into your hand. Does not the LORD go out before you?” So Barak went down from Mount Tabor with ten thousand men following him.
Webster’s Bible (WBT)
And Deborah said to Barak, Arise, for this is the day in which the LORD hath delivered Sisera into thy hand: hath not the LORD gone out before thee? So Barak went down from mount Tabor, and ten thousand men after him.
World English Bible (WEB)
Deborah said to Barak, Up; for this is the day in which Yahweh has delivered Sisera into your hand; hasn’t Yahweh gone out before you? So Barak went down from Mount Tabor, and ten thousand men after him.
Young’s Literal Translation (YLT)
And Deborah saith unto Barak, `Rise, for this `is’ the day in which Jehovah hath given Sisera into thy hand; hath not Jehovah gone out before thee?’ And Barak goeth down from mount Tabor, and ten thousand men after him.
நியாயாதிபதிகள் Judges 4:14
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.
And Deborah said unto Barak, Up; for this is the day in which the LORD hath delivered Sisera into thine hand: is not the LORD gone out before thee? So Barak went down from mount Tabor, and ten thousand men after him.
| וַתֹּאמֶר֩ | wattōʾmer | va-toh-MER | |
| דְּבֹרָ֨ה | dĕbōrâ | deh-voh-RA | |
| אֶל | ʾel | el | |
| בָּרָ֜ק | bārāq | ba-RAHK | |
| ק֗וּם | qûm | koom | |
| כִּ֣י | kî | kee | |
| זֶ֤ה | ze | zeh | |
| הַיּוֹם֙ | hayyôm | ha-YOME | |
| אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER | |
| נָתַ֨ן | nātan | na-TAHN | |
| יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| סִֽיסְרָא֙ | sîsĕrāʾ | see-seh-RA | |
| בְּיָדֶ֔ךָ | bĕyādekā | beh-ya-DEH-ha | |
| הֲלֹ֥א | hălōʾ | huh-LOH | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| יָצָ֣א | yāṣāʾ | ya-TSA | |
| לְפָנֶ֑יךָ | lĕpānêkā | leh-fa-NAY-ha | |
| וַיֵּ֤רֶד | wayyēred | va-YAY-red | |
| בָּרָק֙ | bārāq | ba-RAHK | |
| מֵהַ֣ר | mēhar | may-HAHR | |
| תָּב֔וֹר | tābôr | ta-VORE | |
| וַֽעֲשֶׂ֧רֶת | waʿăśeret | va-uh-SEH-ret | |
| אֲלָפִ֛ים | ʾălāpîm | uh-la-FEEM | |
| אִ֖ישׁ | ʾîš | eesh | |
| אַֽחֲרָֽיו׃ | ʾaḥărāyw | AH-huh-RAIV |
Cross Reference
2 சாமுவேல் 5:24
முசுக்கட்டைச் செடிகளின் துணிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தைமுறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.
உபாகமம் 9:3
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.
ஏசாயா 52:12
நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.
மீகா 2:13
தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.
சங்கீதம் 68:7
தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்,(சேலா.)
1 சாமுவேல் 9:26
அவர்கள் அதிகாலமே கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின் மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படிக்கு ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள்.
நியாயாதிபதிகள் 19:28
எழுந்திரு போவோம் என்று அவன் அவளோடே சொன்னதற்குப் பிரதியுத்தரம் பிறக்கவில்லை. அப்பொழுது அந்த மனுஷன் அவளைக் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு, பிரயாணப்பட்டு, தன் இடத்திற்குப் போனான்.
யோசுவா 7:13
எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையத்தினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
ஆதியாகமம் 44:4
அவர்கள் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப் போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?
ஆதியாகமம் 19:14
அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப் போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது.
Tags அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி எழுந்துபோ கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள் அப்பொழுது பாராக்கும் அவன் பின்னாலே பதினாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்
Judges 4:14 in Tamil Concordance Judges 4:14 in Tamil Interlinear Judges 4:14 in Tamil Image