Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 22:22 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 22 2 Samuel 22:22

2 சாமுவேல் 22:22
கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.

Tamil Indian Revised Version
கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என்னுடைய தேவனுக்குத் துரோகம் செய்ததில்லை.

Tamil Easy Reading Version
ஏனென்றால் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன்! எனது தேவனுக்கு எதிரான பாவத்தைச் செய்யவில்லை.

Thiru Viviliam
⁽ஏனெனில், நான் ஆண்டவர்␢ காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்;␢ பொல்லாங்குசெய்து என் கடவுளை␢ விட்டு அகலவில்லை.⁾

2 Samuel 22:212 Samuel 222 Samuel 22:23

King James Version (KJV)
For I have kept the ways of the LORD, and have not wickedly departed from my God.

American Standard Version (ASV)
For I have kept the ways of Jehovah, And have not wickedly departed from my God.

Bible in Basic English (BBE)
For I have kept the ways of the Lord; I have not been turned away in sin from my God.

Darby English Bible (DBY)
For I have kept the ways of Jehovah, And have not wickedly departed from my God.

Webster’s Bible (WBT)
For I have kept the ways of the LORD, and have not wickedly departed from my God.

World English Bible (WEB)
For I have kept the ways of Yahweh, And have not wickedly departed from my God.

Young’s Literal Translation (YLT)
For I have kept the ways of Jehovah, And have not done wickedly against my God.

2 சாமுவேல் 2 Samuel 22:22
கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
For I have kept the ways of the LORD, and have not wickedly departed from my God.

כִּ֥יkee
שָׁמַ֖רְתִּיšāmartîsha-MAHR-tee
דַּרְכֵ֣יdarkêdahr-HAY
יְהוָ֑הyĕhwâyeh-VA
וְלֹ֥אwĕlōʾveh-LOH
רָשַׁ֖עְתִּיrāšaʿtîra-SHA-tee
מֵֽאֱלֹהָֽי׃mēʾĕlōhāyMAY-ay-loh-HAI

Cross Reference

நீதிமொழிகள் 8:32
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.

ஆதியாகமம் 18:19
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

சங்கீதம் 128:1
கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

எபிரெயர் 10:38
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.

2 கொரிந்தியர் 1:12
மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.

யோவான் 15:10
நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

செப்பனியா 1:6
கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.

சங்கீதம் 125:5
தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானமுண்டு.

சங்கீதம் 119:1
கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.

சங்கீதம் 36:3
அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மைசெய்வதையும் விட்டுவிட்டான்.

யோபு 23:10
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.

1 சாமுவேல் 12:3
இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.

எண்ணாகமம் 16:15
அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக; நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை என்றான்.


Tags கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை
2 Samuel 22:22 in Tamil Concordance 2 Samuel 22:22 in Tamil Interlinear 2 Samuel 22:22 in Tamil Image